districts

img

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக் கோரி ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக் கூடிய மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை செங்கல்பட்டு நகர மன்ற தலைவர் ந.தேன்மொழி தொடங்கி வைத்தார். இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.ஜெயந்தி, துணைச் செயலாளர் பார்வதி, தேவி, ஆனந்த ஜோதி, சோனியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.