பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் திருவொற்றியூர் சுங்கச்சாவடி அருகே நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் துவக்கி வைத்தார். இதில் சங்கத்தின் தலைவர் ஆர்.ஜெயச்சந்திரன், நிர்வாகிகள் செல்வகுமாரி, தில்ஷாத் பேகம், மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.பாக்கியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.