கடலூர்,ஆக.29- வறுமை கோடு பட்டி யலில் முறைகேட்டை கண்டித்து கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம், விருத் தாசலம் வட்டம், தெற்கு சேப்ளாநத்தம் ஊராட்சியில் சீராங்குப்பம் கிராமத்தில் 500 க்கு மேல் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பகுதி யினர் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர். ஏழை, கூலி தொழிலாளி கள் பெயர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பெயர் வறுமைக்கோடு பட்டியலில் விடுபட்டுள்ள நிலையில், 10 ஏக்கர் நிலம், கார் என்று வசதி படைத்தவர்கள் பல ரும் வறுமைக்கோடு பட்டி யலில் இணைத்துள்ளனர். இந்த மோசடி பட்டி யலை ரத்து செய்து, ஏழை கள் அனைவரையும் சேர்க்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்த போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.பிரகாஷ், ஜெயக்குமார், பொன்னம்பலம் மற்றும் கிளை நிர்வாகிகள் ஜெயந்தி ஸ்வேதா சசிகலா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.