districts

img

“காவேரி ஓரம்” சிறுகதைகள் நூல் வெளியீட்டு விழா

கிருஷ்ணகிரி,நவ.26 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பழ.பாலசுந்தரம் படைத்த “காவேரி ஓரம்” சிறுகதைகள் நூல் வெளியீட்டு விழா ஓசூரில் நடைபெற்றது. கிளை பொருளாளர் சென்றாயன் வர வேற்றார். செயலாளர் ஷம்பு ஒருங்கி ணைத்தார்.மூத்த எழுத்தாளர் கமலாலயன் துவக்க உரையாற்றினார்.  எழுத்தாளர்கள், ரமேஷ் கல்யாண், பத்மபாரதி, பாலகுமார் விஜயராமன், மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநில துணைச் செயலாளர் கரீம், மதிப்புரை ஆற்றினர். மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா,காவேரி ஓரம் சிறுகதை நூலை வெளியிட்டு வாழ்த்திப் பேசினார்.  சிறுகதைகள் நூலின் எழுத்தாளர் மாவட்ட செயலாளர் பழ.பாலசுந்தரம் ஏற்புரையாற்றினார். மூத்த எழுத்தாளரும் தீக்கதிர் முன்னாள் ஆசிரியருமான சு.பொ. அகத்திய லிங்கம், குப்பம் திராவிடப் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் கா.மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கிளைச் செயலாளர் பொன் சங்கர் நன்றி கூறினார்.