districts

img

அரசு மனநல காப்பகத்தை தனியார்மயமாக்க முயற்சி!

சென்னை கீழ்ப்பா க்கம் அரசு மனநல மருத்துவமனையை (institute of mental health care kilpauk Chennai) தனியார் நிறு வனம் போல நடத்த சுகாதாரத் துறை செயலர் விடுத்துள்ள உத்த ரவை உடனே திரும்ப பெற வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வு க்கான மருத்துவர் அரங்கம் கேட்டுக்  கொண்டுள்ளது.   இது குறித்து அந்த அரங்கின் செயலாளர் மருத்துவர் காசி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:  சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையை தனி யார் நிறுவனம் போல நடத்த சுகாதா ரத்துறை முதன்மை செயலர் சுப்ரியா சாகு ஒரு உத்தரவை வெளி யிட்டுள்ளார். இந்த உத்தரவை மாநில அரசு உடனே திரும்ப பெற வேண்டும். கீழ்பாக்கத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு மனநல மருத்துவமனை சுமார் 230 ஆண்டு பாரம்பரியம் உடைய மருத்து வமனை ஆகும்.  நாள்தோறும் சுமார் ஆயிரத் துக்கும் மேற்பட்ட புற நோயாளி களுக்கு இங்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் சுமார் 800க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் முழுக்க முழுக்க அரசின் பராம ரிப்பிலேயே பாதுகாக்கப்பட்டு வருவதும் இதன் சிறப்பம்சம் ஆகும். தினந்தோறும் தமிழ்நாட் டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏழை எளிய மக்கள் மனநலம் சார்ந்த  சிகிச்சைக்கு அரசு மனநல மருத்துவ மனையை நாடி வருகின்றனர்.  பெங்களூருவில் இயங்கும் மத்திய அரசின் நிமான்ஸ் (என் ஐ எம் எச் ஏ என் எஸ்) நிறுவனத்திற்கு இணையான சேவைகளை வழங்கி வரும் கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகளை அதி கரித்து தேவைக்கேற்ப ஊழி யர்களையும் மருத்துவர்களையும் நியமிக்க வேண்டும். இதுவே மருத்துவத்துறை செயலாளருக்கு இன்றியமையாத கடமையாக இருக்க வேண்டும். நிலைமை இவ்வாறு இருக்க தற்போது மருத்துவ துறை செயலாளராக இருப்பவர் தனக்கு கீழ் இயங்கும் அதிகாரியான மருத்துவக் கல்வி  இயக்குனருக்கு ஒரு உத்தரவை அனுப்பியுள்ளார். அதில் கீழ்ப் பாக்கம் அரசு மாநில மருத்துவ மனையை மேம்படுத்தும் முயற்சி கள் தோல்வியடைந்து அரசால் திறம்பட நடத்த இயலாததால் அதனை கம்பெனி சட்டத்தின் கீழ் அரசின் கம்பெனியாக மாற்றுவ தற்கு அரசாணை பெற முன் மொழிவை சமர்ப்பிக்குமாறு அதில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.   கம்பெனியாக மாற்றும் பட்சத்தில் அதிக நிதி உதவியை கார்ப்பரேட் உள்ளிட்ட பல தனி யார் நிறுவனங்களிடம் இருந்து பெற  முடியும் என்று அதில் அவர் குறிப்பி ட்டுள்ளார். மேலும் அரசு மனநல காப்பகத்தின் நிர்வாக குழுவில் தனி யாரை அனுமதித்து தனியார் கம்பெனி போல செயல்பட இந்த  உத்தரவு வழிவகுக்கும். தமிழ்நாட் டில் மட்டுமல்லாமல் இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் ஏன் எந்த ஒரு ஒன்றிய அரசும் மருத்து வமனையும் கம்பெனியாக மாற்றி யதாக முன்உதாரணம் ஏதுமில்லை  என்கிற நிலையில் துறை செயலா ளரின் இந்த உத்தரவு கடும் அதிர்ச்சி யையும் பல்வேறு கேள்விகளை யும் எழுப்பி உள்ளது.  தமிழக அமைச்சரவை முடி வாகவோ சட்டமன்ற அறிவிப்பா கவோ அல்லது முதலமைச்சரின் அறிவிப்பாகவும் பொதுவெளியில் இல்லாத ஒரு விஷயத்தை துறை யின் செயலாளரே தன்னிச்சையாக முடிவெடுப்பதாக தெரிகிறது. கல்வியும் மருத்துவமும் அரசாங் கத்தின் இரண்டு கண்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து செயல்பட்டு வரும் வேளையில் மருத்துவத் துறைக்கு செலவழிக்க நிதியில்லை என்பதால் ஒரு மருத்துவமனையை கம்பெனியாக மாற்றுகிறேன் என்று அரசின் கீழ் இயங்கும் ஒரு துறையின் அதிகாரி யால் எவ்வாறு அறிவிக்க முடிகிறது.  மக்களின் சுகாதாரத்துக்கு செல வழிக்க அரசிடம் நிதி இல்லை என்று துறைச் செயலர் ஒப்புக் கொள்கி றார் என்றால் இதுதான் மாநில அரசின் நிலைப்பாடா என்று கேட்கத் தோன்றுகிறது. அரசு கீழ்ப்பாக்கம் மாநில மருத்துவமனையை கம்பெனியாக மாற்றுவது என்பது பிற்காலத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளையும் இதே போன்று மாற்றி அதை தனியாரி டம் ஒப்படைப்பதற்கான தொடக்க புள்ளியாக கருதவேண்டியுள்ளது- நிதிப் பற்றாக்குறை காரணம் காட்டி  தனியாரிடம் நிதி பெறுவதற்கு வசதி யாக இருக்கும் என்பதற்காக நாளை மருத்துவத்துறையை முழுவது மாக தனியார்மயம் ஆக்கத் திட்டம் இருக்கிறதா என்று அச்சம் ஏற்படு கிறது. தனது துறையில் குறைபாடு இருக்கும்போது அதை களைய வேண்டியது அந்த துறையின் செயலாளருக்கு உள்ள முக்கிய பணி ஆகும். அதற்கு முயற்சி எடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவரே நிர்வாக ரீதியான மாற்றங்களை கொண்டு வந்து தனி யார் மயமாக்கும் வகையில் உத்தர விடுவது கடும் கண்டனத்திற் குரியது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையை தனியார் நிறுவனம் போல நடத்த போடப்பட்டிருக்கும் சுகாதாரத் துறை செயலாளரின் உத்தரவை திரும்ப பெற மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் முதலமைச் சரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.