districts

img

கல்விக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

புதுச்சேரி, அக்.3- உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை திரும்ப பெறக்கோரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் புதுச்சேரியில் தொடர் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ளூர் மாண வர்களுக்கு அனைத்து பாடப் பிரிவுகளிலும் 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டும், அண்மையில் உயர்த்திய  கல்வி கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். மாணவர் சங்க பேரவை தேர்தலை நடத்த வேண்டும். தாமதமாக கட்டிய கல்வி கட்டணத்திற்கு வசூலிக்கப்பட்ட அபராத தொகையை  மாணவர்களிடம் வழங்க வேண்டும். பல்கலைக்கழக  பட்ட மளிப்பு விழாவை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக நிர்வாக அலுவலக வாயில் முன்பு 3வது நாளாக வியாழக்கிழமை (அக்.3) நடை பெற்ற தர்ணா போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் பல்கலைக்கழக கிளைத் தலைவர் அகிலா தலைமை தாங்கினர். இந்திய மாணவர் சங்கத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் பிரவீன்குமார் போராட்டத்தை வாழ்த்திப் பேசினார். சங்க நிர்வாகிகள் சிவா ஆதித்யா,தேவன், நிர்மல், அஸ்வின், கங்கா உள்ளிட்ட திரளான மாணவர்கள் இப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.