துறைமுகம் பகுதி, பிஆர்என் கார்டனில் ஆழ்துளை கிணறு குழாயை சுற்றி நீண்ட நாட்களாக புழுக்கள் மிதக்கும் நிலையில் சாக்கடை தேங்கி நிற்கிறது. இந்த இடத்தை செப்பனிடக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, 56வது வட்ட குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய உதவி செயற்பொறி யாளரிடம், சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் லோ.விக்னேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் உமாநாத், பகுதி ஒருங்கிணைப்பாளர் மகேஷ் ஆகியோர் மனு அளித்தனர்.