திருவள்ளூர், அக். 20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சோழவரம் ஒன்றிய 24 வது ஒன்றிய மாநாடு ஞாயி றன்று (அக் 20), சோழவரத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஜி.சந்தானம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் இ.ரவி, எம்.ரமணி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட குழு உறுப்பினர் பி.நடேசன் கொடியேற்றி வைத்து பேசினார். மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.சித்ரா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். ஒன்றிய குழு உறுப்பி னர் சி.மனோகரன் வரவேற்றார். மாநில குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன் துவக்கவுரையாற்றினார்.ஒன்றிய செயலாளர் ஜி.எல்லையன் வேலை அறிக்கையை முன்வைத்தார். மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் வாழ்த்தி பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துளசிநாராயணன் மாநாட்டை முடித்து வைத்து பேசினர். ஒனறிய குழு கே.கார்த்திக் நன்றி கூறினார். ஒன்றியக்குழு தேர்வு 9 பேர் கொண்ட சோழவரம் ஒன்றியக் குழுவின் செயலாளராக அ.து.கோதண்டன் தேர்வு செய்யப்பட்டார். தீர்மானங்கள் சோழவரத்தில் நவீன மேம்படுத்த அரசு மருத்துவ மனை அமைக்க வேண்டும், ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராம சாலைகளையும் சீரமைக்க வேண்டும், இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்க வேண்டும், பாடிய நல்லூரில் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும், நூறு நாள் வேலை தொடர்ந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.