சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் “சிங்க மங்கைகளே சீறி எழுக, சங்க உரிமைகளை மீட்டுப் பெறவே” என்ற தலைப்பில் கருத்தரங்கம் தங்கசாலையில் மாவட்ட மகளிர் அமைப்பாளர் ஜெ.சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில துணைப் பொதுச்செயலாளர் தெ.வாசுகி, மாநிலச் செயலாளர் சுமதி, மாநில மகளிர் செயலாளர் எஸ்.அருணா, முன்னாள் மாநில மகளிர் துணைக்குழ உறுப்பினர் ப.சுந்தரம்மாள், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் வி.அந்தோணி, செயலாளர் வே.விஜயகுமரன் ஆகியோர் பேசினர். முன்னதாக மகளிர் துணைக்குழு உறுப்பினர் என்.சித்ரா வரவேற்றார். இணைச்செயலாளர் டி.சுமதி நன்றி கூறினார்.