districts

செம்பரம்பாக்கம் ஏரி  வேகமாக நிரம்புகிறது

 பூந்தமல்லி, நவ.13- வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்க ளில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. பலத்த மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து மீண்டும் அதி கரித்து உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ள ளவு 3645 மி.கனஅடி ஆகும். இதிலும் 2728 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரியின் நீர் மட்டம் 21 அடியை நெருங்கி உள்ளது. மொத்த அளவு 24 அடியில் தற்போது, 20.5 அடிக்கு தண்ணீர் நிரம்பி பெருவெள்ளம் போல் காட்சி அளிக்கிறது. கனமழையால் ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.  ஞாயிறன்று (நவ.13)  நிலவரப்படி ஏரிக்கு 2187 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஏரியில் இருந்து 1180 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தபடி உள்ளது. இதையடுத்து ஏரிக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து உபரிநீர் திறப்பை மேலும் அதிகரிக்க அதிகாரிகள் திட்டமிட்டு வந்தனர். மேலும் ஏரிக்கு வரும் தண்ணீரை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
நிரம்பும் புழல் ஏரி
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடி. இதில் 2794 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஞாயி றன்று நிலவரப்படி ஏரிக்கு 756 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 710 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. ஏரியின் மொத்த உயரமான 21 அடியில் தற்போது 18.92 அடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது. ஏரிக்கு வரும் நீர்வரத்தை கண்காணித்து உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.
சோழவரம் ஏரி
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி.கனஅடி. இதில் 351 மி.கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 211 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கன அடி. இதில் 1165 மி.கன அடி தண்ணீர் நிரம்பி உள்ளது. ஏரிக்கு 670 கனஅடி தண்ணீர் வருகிறது. 53 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி வழிகிறது. ஏரிக்கு வரும் 230 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.