சென்னை, மார்ச் 23- சட்ட விரோதமாக எல்லையை கடக்க முயன்ற தாக சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் காவல் நிலைய சிறப்பு உதவிஆய்வாளரை வங்கதேச ராணுவம் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. சென்னை அடுத்த தாம்பரம் காவல் ஆணை யரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையமாக சேலையூர் காவல் நிலை யம் செயல்பட்டு வருகிறது. தாம்பரம் பகுதியில் அதிக குற்ற சம்பவங்கள் நடை பெறும் காவல் நிலையங் களில் ஒன்றாக, இந்த காவல் நிலையம் உள்ளது. திருச்சியை சேர்ந்த ஜான் செல்வராஜ் மடிப் பாக்கத்தில், தங்கி சேலை யூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவிஆய்வாளராக வேலை பார்த்து வந்தார். அடிக்கடி நீண்ட நாட்கள் விடுமுறை எடுத்து வந்த நிலையில் மருத்துவ விடுப் பில் சென்றவர் தற்போது வங்கதேச ராணுவத்தில் பிடிபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. காவல் நிலையத்தில் நீதிமன்றத்திற்கு குற்றவாளி களை அழைத்து செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தவர் சட்ட விரோத கும்பலுடன் தொடர்பு வைத்திருந்தாரா என காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர். அவர் காவல்துறையில் பணிபுரிபவர் என்பதை அறிந்த வங்கதேச ராணுவ வீரர்கள் இந்திய ராணு வத்திடம் விசாரித்துள்ளனர். விசாரணையில் இவர் காவல் அதிகாரி என தெரிந் தவுடன், சம்பந்தப்பட்ட மாநில காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சென்னை யில் ஜான் செல்வராஜ் தங்கியிருந்த வீட்டை காவல்துறையினர் சோதனை செய்ய உள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் எதற்காக மருத்துவ விடுமுறை என கூறிவிட்டு வங்கதேசம் எல்லைக்கு சென்றார்? அவர் யார் யாருடன் நெருங் கிய தொடர்பு வைத்திருந் தார் என விசாரித்து வருகிறார் கள். சர்வதேச கும்பலுடன் அவர் தொடர்பு வைத்துள் ளாரா எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.