districts

img

சின்னமுதலியார் சாவடி காப்பகத்திற்கு சீல்

விழுப்புரம்,பிப்.17- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் இயங்கி வருகிறது. இதன் கிளை நிறு வனமான மனநல காப்பகம் கோட்டக்குப்பம் அடுத்த சின்ன முதலியார் சாவடியில் இயங்கி வந்தது. இந்த காப்பகத்தில் 12 பெண்கள், 12 ஆண்கள் பரா மரிக்கப்பட்டு வந்தனர். அன்பு ஜோதி அறக்கட்டளையின் மற்றொரு காப்பகம், விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே குண்டல புலியூரில் இயங்கியது. அந்த காப்பகத்தில் இருந்து மனநலம் குன்றிய பெண்ணை, சின்ன முதலி யார்சாவடி காப்ப  கத்திற்கு அழைத்து வந்து, போதை மருந்து கொடுத்து பாலி யல் தொந்தரவு செய்ததாக, அதி காரிகளுக்கு புகார் சென்றது.  அதன்பேரில், துணை கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி தலைமையில் அதிகாரிகள் சின்ன முதலியார் சாவடியிலுள்ள மனநல காப்பகத்தை ஆய்வு செய்தனர். பாலியல் புகார் குறித்தும் தீவிரமான விசாரணை மேற்கொண்டனர். இதனை உறுதிப்படுத்துவதற்காக பாதிக்கப்பட்டவர்களை மருத்துவப்பரிசோதனைக்குட் படுத்த முடிவு செய்யப்பட்டது.  மேலும் காப்பகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதும் தெரியவந்தது. அதையடுத்து, காப்பகத்தில் தங்கியிருந்தவர்களுக்கு  மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், காப்ப கத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 24 பேரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, வானூர் வட்டாட்சி யர், கோட்டக்குப்பம் தனிப் பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள், சின்ன முதலியார்சாவடியில் அன்பு ஜோதி அறக்கட்டளை மூலம் இயங்கிய காப்பகத்தை மூடி ‘சீல்’ வைத்தனர்.