விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கந்தாடு கிராமத்தில் கடல் நீர் உட்புகாதவாறு தடுக்க கட்டப்பட்டு வரும் கழுவெளி ஏரி கடைமடை அணையை மாவட்ட ஆட்சியர் சி.பழனி புதன்கிழமை (ஆக.7) பார்வையிட்டு ஆய்வு செய்தார். திண்டிவனம் சாராட்சியர் திவ்யான்ஷா நிகம், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் தயாளன், மரக்காணம் வருவாய் வட்டாட்சியர் பாலமுருகன் உட்பட பலர் உடனிருந்தனர்.