மின்சார ரயிலில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு
சென்னை, மார்ச் 6- சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயிலில் சுண்ணாம்பு குளத்தைச் சேர்ந்த மவுலி (24), சரத் (26), கும்மிடிப்பூண்டியை சேர்ந்த உத்ராபதி (27), இளையராகவன் (22) ஆகிய 4 பேர் ஒரே பெட்டியில் செவ்வாய்க்கிழமை இரவு 12 மணியளவில் பயணம் செய்துள்ளார் அப்போது கவரப்பேட்டை பகுதியை ரயில் சென்றடைந்த போது ஓடும் ரயிலில் ஏறிய மர்ம நபர்கள் கத்தியை எடுத்து சரமாரியாக அந்த பெட்டியில் இருந்தவர்களை தாக்கி 5,000 ரூபாய், செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு, ரயிலில் உள்ள அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திவிட்டு இறங்கி சென்றுள்ளனர். இதுகுறித்து பயணிகள் கொருக்குப்பேட்டை இருப்பு பாதை காவல் துறையில் புகார் அளித்தனர். காவல்துறையி னர் பாதிக்கப்பட்டவர்களிடம் ரயில் கொள்ளையில் ஈடுபடும் நபர்களின் புகைப்படங்களை காட்டி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீரோடையை மீட்க வேண்டும் கிராம மக்கள் வலியுறுத்தல்
திருவள்ளூர், மார்ச் 6- திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டம் தச்சூர் காவல் நிலையம் அருகில் உள்ள நிலத்தை வீட்டு மனை பிரித்து விற்பனை செய்ய தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த இடத்தை சுற்றி மூன்று பக்கமும் மிகப் பெரிய நீரோடை அமைந்துள்ளது. இதனருகில் பல ஏக்கரில் நெல் பயிர் விவசாயம் செய்து வருகின்றனர். அந்த நிலத்தின் உரிமையாளர்கள் ஓடையை ஆக்கிரமிப்பு செய்து வீட்டு மனைகளை அமைத்து வருகின்றனர். வரும் மழைக்காலங் களில் கொசஸ்தலை ஆறு மற்றும் பிச்சாட்டூர் ஏரியிலிருந்து இந்த ஓடை வழியே மழை நீர் சென்று பொன்னேரி ஏரியில் கலக்கிறது. லாபவெறி கொண்ட சில நபர்கள் இந்த ஓடையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் ஊருக்குள்ளும் விவசாயம் நிலங்களிலும் வெள்ள நீர் புகும் அபாயம் உள்ளது. இந்த ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து ஓடையை மீட்டு அந்த இடத்தை ஆய்வு செய்ய வேண்டும். மேலும் மழைக்காலங்களில் நீர் தேங்கும் அந்த இடத்தை விற்க நினைக்கும் ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு அங்கீகார ஆவணம் வழங்கக்கூடாது என கூறி கிராம மக்கள் பொன் னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
வாட்ஸ்அப் வணிகத்திற்கான கட்டணமில்லா சேவை அறிமுகம்
சென்னை, மார்ச் 6- வர்த்தகத்தில் இருந்து வர்த்தகத்திற்கான டிஜிட்டல் மற்றும் கிளவுட் சேவை வழங்கும் நிறுவனமான டாடா தொலை தொடர்பு நிறுவனம் வாட்ஸ்அப் வணிகத்திற்கான கட்டணமில்லா ஒற்றை எண் ஒருங்கிணைந்த தீர்வையை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஒற்றை எண் ஒருங்கிணைந்த சேவையானது நிறுவனத்தின் கட்டணமில்லா எண்கள் மற்றும் சிறந்த பயனர் அனுபவம் மற்றும் வாட்ஸ்அப் வர்த்தக தளம் ஆகியவற்றை ஒன்றாகக் கொண்டுவருகிறது, இது நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் தடையற்ற வர்த்தகத்தை மேற்கொள்ள உதவுகிறது என்று நிறுவனத்தின் துணைத் தலைவர் காளிதாஸ் கூறியுள்ளார்.
வளர்ச்சித் திட்டங்கள் ஜவுளி நிறுவனம் வெளியீடு
சென்னை, மார்ச் 6- உலகளாவிய போட்டியை எதிர்கொள்ள இந்திய ஜவுளித் துறை தயாராகி வரும் நிலையில், கேவல் கிரண் குளோத்திங் நிறுவனத்தின் முன்னணி பேஷன் பிராண்டுகளில் ஒன்றான கில்லர், அதன் வளர்ச்சித் திட்டங்களை வெளியிட்டுள்ளது. புதுடில்லியில் நடைபெற்ற ஜவுளி ஆலைகள் தொடர்பான தேசிய கண்காட்சியான பாரத் டெக்ஸ் 2024 நிகழ்ச்சியில் இதனை அந்நிறுவனம் வெளியிட்டது. இது குறித்து நிறுவனத்தின் இைண நிர்வாக இயக்குநர் ஹேமந்த் ஜெயின் கூறுகையில், எங்களின் அதிநவீன தயாரிப்புகள் மற்றும் வரவிருக்கும் இலையுதிர் மற்றும் குளிர்காலம் 2024க்கான ஆடை ரகங்களை இதில் அறிமுகம் செய்துள்ளோம் என்றார்.
விடுதிக்குள் கொள்ளை முயற்சி: இளைஞர் கைது
சென்னை, மார்ச் 6- சென்னை அருகே வெட்டுவாங்கேணியில் கன்னியா ஸ்திரிகள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக இளைஞர் கைது செய்யப்பட்டார். நீலாங்கரை அருகே உள்ள வெட்டுவாங்கேணியில் புனித அன்னாள் மடம் என்ற பெயரில் கன்னியாஸ்திரிகள் விடுதி செயல்படுகிறது. இந்த விடுதிக்குள் செவ்வாய்க் கிழமை இரவு அத்துமீறி நுழைந்த ஒரு நபர், அங்கு சமையல் வேலை செய்து கொண்டிருந்த சின்னபொன்னு என்பவர் கழுத்தில் கத்தியை வைத்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதைப் பார்த்த அங்கிருந்த பிற ஊழியர்களும், கன்னியா ஸ்திரிகளும் சத்தமிட்டனர். உடனே அந்த நபர், அங்கிருந்து தப்பியோடினார். இது தொடர்பாக அந்த விடுதி பொறுப்பாளர் சவுரியம்மாள், நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். விசாரணை யில் இச் சம்பவத்தில் ஈடுபட்டது நீலாங்கரை பாரதியார் நகர் 12ஆவது தெருவைச் சேர்ந்த ஆ.ராகேஷ் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர், ராகேசை கைது செய்தனர்.
சாதி, மதம் சார்ந்து எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை செங்கல்பட்டு கல்லூரி முதல்வர் மறுப்பு
செங்கல்பட்டு, மார்ச் 6- ஜம்மு- காஷ்மீர் மாண வர்கள் தாடியை எடுக்கச் சொன்ன விவகாரத்திற்கு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வர் மறுப்பு தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் நர்சிங் கல்லூரியில் காஷ்மீரைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களிடம் தாடி வளர்க்கக் கூடாது என்றும் தாடியை மடித்தால் தான் தேர்வு எழுத அனு மதிக்கப்படுவார்கள் என்றும், கல்லூரி நிர்வாகம் கூறியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாடியை எடுக்கச் சொல்வதாக ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தனர். இதில், கல்லூரி நிர்வாகத்தின் செயல் ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் கொடுக்கப் பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், தாடியை எடுக்கச் சொல்லி நிர்பந்திப்ப தாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பாஸ்கர், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் பயிலும் ஜம்மு – காஷ்மீர் மாணவர்கள் தாடி வளர்க்க தடை விதிக்க வில்லை. சாதி, மத அடிப்படையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க வில்லை. தாடியை எடுக்கச் சொன்னதில் எந்த காழ்ப் புணர்ச்சியும் இல்லை; நிர்பந்திக்கவும் இல்லை. ஆடை விவகாரத்தில் மாண வர்கள் நன்னடத்தையை பின்பற்றுமாறு பொதுவான அறிவுறுத்தல் வழங்கப் பட்டது. சாதி, மதம் சார்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப் படவில்லை என்று தெரிவித் துள்ளார்.
கல்லூரி மாணவரை மிரட்டி வழிப்பறி
சென்னை, மார்ச் 6- சென்னை திருவல்லிக்கேணியில் கல்லூரி மாணவரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவல்லிக்கேணி ராஜா ஹைதர் தெருவைச் சேர்ந்துவர் முகமது பரீத். இவர் ராயப்பேட்டை பார்டர் தோட்டத்தில் மாட்டிறைச்சி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் முகமது அப்ரார் (18). இவர் ராயப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார். முகமது அப்ரார், செவ்வாயன்று திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள், அபராரிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர் வைத்திருந்தை ரூ.12,500 ரொக்கத்தை பறித்துக் கொண்டு தப்பியோடினார். இதுகுறித்து ஜாம் பஜார் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடுதிக்குள் கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் கைது
சென்னை, மார்ச் 6- நீலாங்கரை அருகே உள்ள வெட்டு வாங்கேணியில் புனித அன்னாள் மடம் என்ற பெயரில் கன்னியாஸ்திரிகள் விடுதி செயல்படுகிறது. இந்த விடுதிக்குள் செவ்வாயன்று இரவு அத்துமீறி நுழைந்த ஒரு நபர், அங்கு சமையல் வேலை செய்து கொண்டிருந்த சின்னபொன்னு என்பவர் கழுத்தில் கத்தியை வைத்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் கூச்ச லிட்டனர். உடனே அந்த நபர், அங்கிருந்து தப்பியோடினார். இது தொடர்பாக விடுதி பொறுப்பாளர் சவுரியம்மாள், நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது நீலாங்கரை பாரதியார் நகர் 12ஆவது தெருவைச் சேர்ந்த ஆ.ராகேஷ் (25) என்பது தெரிய வந்தததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
வேலூரில் அரசு அருங்காட்சியக விரிவாக்கம் பணி விரைவில் தொடங்கும்
வேலூரில் அரசு அருங்காட்சியக விரிவாக்கம் பணி விரைவில் தொடங்கும் வேலூர். மார்ச் 6 - வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகம் விரிவாக்கம் செய்யும் பணி விரைவில் தொடங்கும் என சட்டமன்ற உறுதிமொழிக்குழு தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு சட்ட பேரவை உறுதிமொழி குழு வேலூர் மாவட் டத்தில் பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் தலை மையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். முதலில் வேலூர் மாநகரில் கட்டப் பட்டு வரும் அரசு பென்ட்லண்ட் மருத்துவ மனையை ஆய்வு செய்து ஆய்வுக்கு பின்னர் மருத்துவமனை கட்டுமான பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வலியுறுத்தினர். தொடர்ந்து வேலூர் கோட்டை வளா கத்தில் அமைந்துள்ள அரசு அருங்காட்சி யகத்திற்கு சென்றனர். அங்கு அனைத்து கேலரிகளையும் சுற்றி பார்த்த சட்ட மன்ற உறுப்பினர் குழுவினர் அங்குள்ள பொருட்களின் விவரங்களை கேட்டறிந்த னர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன் வேலூர் அரசு அருங்காட்சியகம் விரைவில் 98.86 லட்சத்தில் விரி வாக்கம் செய்யப்படும் என்றும் விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.