districts

img

கட்டுமான தொழிலாளர் குழந்தைகள் பொறியியல் படிக்க உதவித்தொகை

சென்னை, அக்.9-  சுமங்கலா ஸ்டீல்ஸ் நிறுவனம் ‘உங்கள் குழந்தையும் ஆகலாம் இன்ஜி னியர்’ என்ற உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.   கட்டுமானத்துறையில் உள்ள பணி யாளர்கள் மற்றும் ஸ்டீல் டீலர்கள் ஆகி யோரின் அனைத்து குழந்தைகளும் இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு தகுதி யானவர்கள். கட்டுமான தொழிலாளர்களின்  குழந்தைகளுக்கு வழங்கப்படும் இந்த உதவித்தொகை திட்டத்தின்  மூலம்  அவர்களது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த உதவுவதோடு அவர்கள் குழந்தைகளின் கனவுகள் நனவாகவும் ஆதரவு அளிக்கிறோம் என்று சுமங்கலா ஸ்டீலின் தலைவர் ராஜேந்திரன் சபா நாயகம்  தெரிவித்துள்ளார். ப்ளஸ் 2 தேர்வில் பெற்ற குறைந்த  பட்சம் 70விழுக்காடு தகுதி மதிப்பெண்க ளின் ( கட்ஆப் மதிபெண்கள் ) அடிப்படை யில் தகுதியான மாணவர்கள் இதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளின் படிப்பிற்கான செலவை ஒரு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை நிறுவனம் ஏற்றுக்கொள்கிறது. இந்த மாணவர்கள் பொறியியல் படிப்பினை மேற்கொள்ளும்போது அவர்களுக்கு சொந்தமாக லேப்டாப்களை நிறுவனம் அளித்து உதவி செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.