திருவள்ளூர் மாவட்டத்தில் பெற்றோரை இழந்து படிப்பை தொடர முடியாத 24 மாணவ மாணவிகளுக்கு இந்திய வளர்ச்சி இயக்கம் (எய்டு) ரெடிங்டன் பவுண்டேசன் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் திட்ட இயக்குனர்கள் விவேக், சுமதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வனிதா, சித்ரா, திட்ட மேலாளர்கள் அருண்குமார், சரத், செல்வி , மாநில ஒருங்கிணைப்பாளர் ஜோதி ஆகியோர் கலந்துகொண்டனர்.