வேலூர், டிச.28- அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை மூலம் விஐடியில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் தலை மையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கோகுல கல்வி நிறுவனத் தலைவரும், பெங்க ளூர் எம்.எஸ்.ராமையா பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் எம்.ஆர். ஜெயராமன் கலந்து கொண்டு 957 மாணவர்களுக்கு 2023-24 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகையாக ரூ. 1 கோடியே 500 வழங்கி னார். பின்னர் அவர் பேசுகையில், “அறக்கட்டளை மூலம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது சமூக அக்கறையை காட்டுகிறது. ஆகவே, நாம் நமக்காக மட்டும் வாழாமல் சமூகத்துக்கும், நாட்டுக்கும் வாழும் வகையில் இன்றைய தலைமுறையை தயார்படுத்த வேண்டும்” என்றார். முன்னதாக அறக்கட்டளை சார்பாக மயிலாம்பிகை குமரகுரு வரவேற்றார். ஜெ.லட்சுமணன், கே.ஜவஹர்லால் ஜெயின், எம்.வெங்கடசுப்பு, வே.பதுமனார், மரு.நர்மதா அசோக் குமார், கைசர் அகமது, கே.எம்.தேவராஜ், கே.எம்.ஜி.ராஜேந்திரன், என்.பாஸ்கரன், பாலாஜி லோகநாதன், அஞ்ச சக்திவேல், ருக்கி ராஜேஷ்குமார், முனைவர் இரத்தின நடராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் உதவி திட்ட இயக்குநர் ப.சுந்தர்ராஜ் நன்றி கூறினார். அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை மூலம் இதுவரைக்கும் 8416 மாணவர்களுக்கு ரூ. 9 கோடியே 35 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.