பட்டியலின மக்களின் கல்வி, வேலை, நிலம் வழங்க வேண்டும், ஒன்றிய பாஜக அரசின் மநுவாத கொள்கைகளை தகர்க்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியபாளையத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெறும் கையெழுத்து இயக்கத்தை சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. பன்னீர்செல்வம் துவங்கி வைத்தார்.கும்மிடிப்பூண்டி, மாதர் பாக்கம், ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் மாவட்ட தலைவர் இ. எழிலரசன், மாவட்ட நிர்வாகிகள் த. கன்னியப்பன், எம். சிவக்குமார், டி. மதன் (வாலிபர்சங்கம்), அ. பத்மா (மாதர்சங்கம்)ஆகியோர் கலந்து கொண்டனர்.