பொதுச் சொத்துக்களில் பட்டியலின மக்களின் பங்கை கொடுக்க வேண்டும், சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்து தனிச்சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய கையெழுத்து இயக்கத்தின் ஒருபகுதியாக செங்கல்பட்டில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் முன்னணியின் பகுதி தலைவர் முத்திருளப்பன் தலைமையில் நடைபெற்றது. வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் பி.எஸ்.எல்லப்பன், முன்னணியின் மாவட்ட நிர்வாகிகள் இ.சங்கர், க.புருசோத்தமன், ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கையெழுத்திட்டு துவக்கி வைத்தனர்.