districts

img

மாதந்தோறும் வரும்முன் காப்போம் திட்ட முகாம் மேயர் ஆர்.பிரியா தகவல்

சென்னை, மார்ச் 11 - பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்களில் மாதம் தோறும் ‘வரும்முன் காப்போம்’ திட்டம் செயல் படுத்தப்படும் என்று சென்னை மாநகர மேயர்  ஆர்.பிரியா தெரிவித் துள்ளார். கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமினை வெள்ளியன்று (மார்ச் 11) தரமணி சென்னை  மேல்நிலைப் பள்ளியில் மேயர் ஆர்.பிரியா தொடங்கி  வைத்தார். இதன்பின் செய்தியா ளர்களிடம் பேசிய மேயர் ஆர்.பிரியா, “ சென்னையில் உள்ள 15 மண்டலத்திலும் மாதம் ஒருமுறை வரும் முன்  காப்போம் திட்ட சிறப்பு முகாம் நடத்தப்படும்  என்றார். இந்த முகாமில் பொது மக்களுக்கு பொது மருத்து வம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், குழந் தைகள் நல மருத்துவம், மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம் உள்ளிட்ட 17 வகையான மருத்துவ வசதிகள் சிறப்பு  மருத்துவர்களால் அளிக்கப் படுகிறது. இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் மு.மகேஷ் குமார், வேளச்சேரி சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.எம்.எச்.ஹசன் மௌலானா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;