சத்துணவு அங்கன்வாடி ஆசிரியர் மற்றும் பணி உயர்வு பெற்று ஓய்வு பெற்ற அனைத்து ஓய்வூதியர்களுக்கு முறையாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மாநில, மாவட்ட, வட்டார, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.