கடலூர்,அக்.14- மக்கள் பயன்படுத்த முடியாதபடி சேரும் சகதியு மாக உள்ள சாலையை சீரமைக்கக் கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியத் துக்கு உட்பட்ட விருப்பாச்சி யில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி வாட்டர் டேங்க் தெருவின் சாலை குண்டும், குழியுமாகவும் உள்ளதால் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட வர முடியவில்லை. எனவே, இந்த சாலையை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக வட்டார வளர்ச்சி அலுவலரி டம் பலமுறை மனு கொடுத் தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை. இதனால் எம்.மகாலட்சுமி தலைமையில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் எம்.பி.தண்ட பாணி, ஒன்றியக் குழு உறுப் பினர் எம்.பூவை பாபு, கிளைச் செயலாளர் ஆர். மகேஷ், விவசாய தொழிலா ளர் சங்க நிர்வாகி அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.