திருவொற்றியூர் (எண்ணூர் மணலி) பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட ஆதரவு நிதி 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ஆர்.முத்துசாமி வழங்க சிஐடியு வடசென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.ஜெயராமன் பெற்றுக்கொண்டார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியம், பகுதிச்செயலாளர் எஸ்.கதிர்வேல், அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அருமைராஜ் ஆகியோர் உடன் உள்ளனர்.