districts

img

சென்னையில் பாய்மரப் படகு போட்டி

சென்னை,மே 4- சென்னையில் பாய்மரப் படகு போட்டி மே 1 ஆம் தேதி தொடங்கியது. இது ஞாயிறன்று  (மே 5) நிறை வடைகிறது. சென்னை துறைமுகத்தி லிருந்து - மகாபலிபுரம் வரை  சென்று திரும்புதல், காம ராஜர் துறைமுகத்திலிருந்து, சென்னை துறைமுகம் வரை சென்று திரும்புதல் என இரு போட்டிகள் நடை பெறும். இந்த போட்டியை www.trackanything.in என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் கண்டு களிக்கலாம். இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர  காவல்படைகள் இந்த  போட்டிகளுக்கு ஆதரவு  மற்றும் தளவாட  உதவிகளை வழங்கியுள்ளது. யுனிஃபை கேபிடல் நிறுவனத்தின் ஆதரவுடன் நடைபெறும் 3வது பதிப்பு பாய்மரப் படகு போட்டியானது, உலகப்  பாய்மரப் படகுப்  போட்டிகளுக்கு இணை யானதாக இருக்கும்.  முன்னதாக இந்தப் போட்டியினை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செய லரான  மேகநாத ரெட்டி,  இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் மாலினி வி.சங்கர் ஆகியோர்  கொடியசைத்து துவக்கி வைத்தனர்.