புதுச்சேரியின் புகழ்பெற்ற சப்தர் ஹஷ்மி கலைக் குழு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 24-வது மாநில மாநாட்டை முன்னிட்டு புதிய பாடல்களுடன் புரட்சிகர பிரச்சார பயணத்தை மேற்கொண்டுள்ளது. பாரம்பரிய பறை இசையுடன் கலந்த நவீன இசைக் கலவையில், மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இப்பாடல்கள் பெரும் வரவேற் பைப் பெற்று வருகின்றன. “செங்கொடி கையில் ஏந்தி வா தோழா” என்ற எழுச்சியூட்டும் பாட லுடன் தொடங்கி, “புதிய உலகம் படைக்க புறப்பட்டு வா தோழா” என்ற அறைகூவலுடன் மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் கலைக்குழு ஈடுபட்டுள்ளது. தற்கால அரசியல் சூழலை விமர் சிக்கும் விதமாக, “வெள்ளைக் காரன் போய் இப்ப கொள்ளைக் காரன் ஆளுகிறான், மறுபடியும் அடி மையாக்க சட்டம் நூறு போடு வான்” என்ற கூர்மையான வரி களால் கார்ப்பரேட் மயமாக்கலின் ஆபத்தை சுட்டிக்காட்டுகிறது கலைக்குழு. தமிழ் மரபின் பெருமையை உணர்த்தும் வகையில், “புற நானூறே நம் வரலாற்றே, நீ இல்லா மல் நம் பூமி சுழலாது” என்ற வரி களுடன், “இயற்கை நமது அன்னை, காப்போம் நமது மண்ணை” என சுற்றுச்சூழல் பாது காப்பின் அவசியத்தையும் வலி யுறுத்துகிறது. நுட்பமான கவிதைத் தொடர்க ளால் கட்சியின் தத்துவத்தை விளக்கும் வகையில், “கதிர வனைக் காண்பதற்கு கைவிளக்கு எதற்கு?” என்ற கேள்வியுடன், “கம்யூனிஸ்டுகளின் பெருமையை சொல்ல வார்த்தைகள் எமக்கு இல்லை, வரலாற்றின் பக்கம் எங்கும் படிந்த எங்கள் ரத்தம்” என கட்சியின் போராட்ட வரலாற்றை நெஞ்சை உருக்கும் வகையில் பதிவு செய்கிறது. குறிப்பாக இளைஞர்களை நோக்கி, “புதுமை படைத்த விழுப்பு ரம் நோக்கி வாருங்கள் இளை ஞர்களே! புதுமைப் படைத்திட விழுப்புரம் நோக்கி வாருங்கள் யுவதிகளே!” என்ற அழைப்பு விடுக் கப்படுகிறது. மாநாட்டின் முக்கிய கோரிக்கை களான மாநில உரிமை பாது காப்பு, உழைப்பாளர் நலன், இளை ஞர் வேலைவாய்ப்பு, தாய்மொழிக் கல்வி, பிறமொழித் திணிப்பு எதிர்ப்பு ஆகியவற்றை எளிமையான பாடல் வரிகளால் மக்களிடம் கொண்டு சேர்க்கிறது. “தாய்மொழியை தாழ விடோம்! தமிழ் மண்ணை காப்போம்! சமத்துவ இந்தியாவை உருவாக்குவோம்!” என்ற முழக் கங்களுடன் நிறைவடையும் இந்த பிரச்சார இசை நிகழ்வுகள், விழுப்பு ரத்தில் ஜனவரி 3, 4, 5 தேதிகளில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கான மக்கள் திரட்சியை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.