தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன் வாரிய பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இதனையொட்டி அவருக்கு மத்திய அமைப்பின் சென்னை கிளைகள் சார்பில் வியாழனன்று (செப்.12) பாராட்டு விழா நடைபெற்றது. இதனையொட்டி சென்னை கிளைகளின் நிர்வாகிகள் அவருக்கு நினைவு பரிசை வழங்கினர்.