சென்னை, ஜூலை 26-
ராயபுரம் கிழக்கு கல்லறை சாலை பகுதியில் அடுக்குமாடி குடி யிருப்புகளை விரைந்து கட்டி முடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடி யிருப்போர் நலச்சங்கத்தின் தலைவர் டி.வெங்கட், செயலாளர் எம்.ராஜா, பொருளாளர் எல்.மோகன் ஆகியோர் மேலாண்மை இயக்குநரை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், 51ஆவது வட்டம் கிழக்கு கல்லறை சாலை குடிசை மாற்று வாரிய இடத்தில் 800 வீடுகள் 1978-ம் ஆண்டும், 128 வீடுகள் 2000ஆம் ஆண்டு கட்டப்பட்டு மொத்தம் 928 வீடுகளில் 5000-க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வரு கின்றனர். 800 குடியிருப்புகள் கட்டி 40 ஆண்டுகள் ஆனதால் மிகவும் சேத மடைந்துள்ளது. ஆகவே நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 2022 மே மாதம் முதல் கணக்கெடுத்து புகைப்படம் எடுத்து இதுவரை 780 பேருக்கு வாடகை பணமாக ரூ 24 ஆயிரம் காசோலையாக வழங்கியுள்ளார்கள். இன்னும் 148 பேருக்கு தர வேண்டியுள்ளது.
குடியிருப்பு வாசிகள் 80 விழுக்காட்டினர் வீட்டை காலி செய்து மாற்று இடம் சென்று நான்கு மாதங்களுக்கு மேலாகிறது. எனவே தாங்கள் தலையிட்டு விரைவாக பணிகளை முடித்து குறிப்பிட்ட காலத்திற்குள் குடியிருப்புகளை கட்டித்தர கோரி சம்மந்தப்பட்ட துறை அமைச்சரையும், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகளையும் வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.