districts

img

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்

கடலூர், செப்.29- வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினையில் மாநில அரசு தலையிட்டு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.  அக்கட்சியின் மாநிலக் குழு கூட்டம் கடலூரில் அறவழி தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் மாநில செயலாளர் ஆர். ஜீவானந்தம், தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் சேக்கிழார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், திருப்பெரும்புதூர் சாம்சங் தொழி லாளர்கள் தொழிற்சங்க உரிமை களுக்காக போராடி வருகிறார்கள். இந்த பிரச்சினையை தமிழ்நாடு அரசு தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், போராடுகிற தொழிலாளர் மீது காவல்துறையின் அடக்குமுறை நட வடிக்கையை நிறுத்த வேண்டும்.  உயர்ந்து வரும் விலைவாசி, வேலை யின்மைக்கு எதிராகவும், பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க, வேலை வாய்ப்புகளை உருவாக்க வலியுறுத்தி வருகிற நவம்பர் 28 ஆம் தேதி டெல்லியில் ஆர்எஸ்பி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து 50 பேர் கலந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.