குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.9,000 பஞ்சபடியுடன் வழங்க வேண்டும், கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இபிஎப் ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் ஒன்றிய அரசிற்கு கடிதம் அனுப்பும் இயக்கம் ஓசூரில் நடைபெற்றது. இதில் செயலாளர் சுகுமாரன், பொருளாளர் தேன்சாமி, லால், உமாமகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.