சென்னை, ஜூலை 11 - குடும்ப தலைவிக ளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல் படுத்த வேண்டுமென்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா வலியுறுத்தி உள்ளார். மாதர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட 16ஆவது மாநாட்டு பேரணி பொதுக்கூட்டம் ஞாயிறன்று (ஜூலை 10) சைதாப்பேட்டை யில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எஸ்.வாலண்டினா பேசியதன் சுருக்கம் வருமாறு: தமிழகத்தில் 50 லட்சம் வீடுகளுக்கு பட்டா இல்லை. மக்கள் விரோத சட்டங்கள், தீர்ப்புகள் வரும்போது அதை எதிர்த்து சட்டம் கொண்டு வரவும், தீர்மானம் நிறைவேற்றவும் மாநில அரசுக்கு உள்ள உரிமையை முதலமைச்சர் நிலைநாட்டவேண்டும். முதலமைச்சரின் வாக்குறு தியை மீறி குடியிருப்புகளை இடிக்கும் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர்ப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு மாநில அரசு 100 கோடி ரூபாய் ஒதுக்கியது. அந்த பணத்தை எடுத்து தானிய கொள்முதல் செய்வது என்று மடைமாற்றம் செய் வது ஏற்புடையதல்ல. அரசு பள்ளியில் படித்த பெண் பிள்ளைகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை வரவேற்கிறோம். அதேநேரத்தில் மூவலூர் ராமாமிர்தம் நினைவு திருமண உதவி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். நுண்நிதி நிறுவனங்க ளின் செயல்பாட்டை அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும், திமுக தேர்தல் நேரத்தில் அறிவித்தபடி படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூட வும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா காலத்திலிருந்து அதிகரித் துள்ள குழந்தை திரு மணத்தை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த கோரி பெண்கள் போராடு வதற்கு முன்பாக அத்திட் டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்தக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.சரவண செல்வி தலைமை தாங்கி னார். மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்டச் செயலாளர் ம.சித்ரகலா, பொருளாளர் ஜெ.ஜூலியட், நிர்வாகிகள் எஸ்.பிச்சையம்மாள், ப.ரே வதி, வி.கவிதா ஆகியோர் பேசினர்.