districts

img

காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்துக!

புதுக்கோட்டை, ஆக.25-  காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டுமென தமிழ்  நாடு விவசாயிகள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தி உள்ளது.  தமிழ்நாடு விவசாய சங்கத் தின் புதுக்கோட்டை மாவட்ட13-ஆவது மாநாடு வியாழனன்று அன்னவாச லில் நடைபெற்றது. தோழர்கள் எம். முத்துராமலிங்கன், எம்.உடையப் பன் ஆகியோர் நினைவரங்கில் நடை பெற்ற மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் ஏ.ராமையன் தலைமை வகித்தார்.  தோழர் எம்.செபஸ்தியான் நினைவாக கொண்டு வரப்பட்ட கொடியை மூத்த தோழர் பெரி.குமாரவேல் ஏறினார். எம்.வீரமணி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வர வேற்பு குழுத் தலைவர் கே.சண்  முகம் வரவேற்றார். தோழர்கள் ப. சண்முகம், எம்.முத்துராமலிங்கம், பி.வீராசாமி, தியாகி சண்முகம் ஆகி யோர் நினைவாக கொண்டு வரப் பட்ட ஜோதியை தலைவர்கள் பெற்  றுக்கொண்டனர்.  மாநாட்டை தொடங்கி வைத்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் உரை யாற்றினார். மாவட்டச் செயலாளர்  எஸ்.பொன்னுச்சாமி, பொருளா ளர் சி.சுப்பிரமணியன் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர்.  மாநாட்டை வாழ்த்தி சிஐடியு  மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், மாதர் சங்க மாவட்டச் செயலாளர்  பி.சுசீலா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஆ.குமாரவேல் ஆகி யோர் பேசினர். புதிய நிர்வாகிகளை  அறிமுகம் செய்து மாநில செயலா ளர் சாமி.நடராஜன் நிறைவுரை யாற்றினார். 

புதிய நிர்வாகிகள் தேர்வு
மாநாட்டில், தலைவராக எஸ்.பொன்னுச்சாமி, செயலாளராக  அ.ராமையன், பொருளாளராக எம். பாலசுந்தரமூர்த்தி, துணைத் தலை வர்களாக ஆர்.சி.ரெங்கசாமி, சி. சுப்பிரமணியன், வீரமணி, நாரா யணமூர்த்தி, துணைச் செயலா ளர்களாக த.அன்பழகன், நாராய ணசாமி, தமிழரசன், பாண்டியன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.  மாநாட்டில், காவிரி, வைகை,  குண்டாறு இணைப்புத் திட்டத்தை  விரைந்து செயல்படுத்த வேண்டும். இத்திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து தாலுகாக்களும் பயன்பெறும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவு டையார்கோயில், மணமேல்குடி தாலுகாக்கள் முழுமையாகவும் கரம்பக்குடி தாலுகாவில் 11 ஊராட்சிகளின் கந்தர்வகோட்டை தாலுகாவில் 2 ஊராட்சிகளும் காவிரி கால்வாய் பாசனப் பகு திக்குள் வருகிறது. இந்தப் பகுதி யை டெல்டா மண்டலத்தோடு இணைக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிமனை கேட்டு மனு கொடுத்து காத்திருக்கும் அனைவருக்கும் விரைந்து மனைப்பட்டா வழங்க  வேண்டும். மத நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்களில் விவசாய செய்து வரும் விவசாயிகளை குத் தகை பதிவு செய்ய வேண்டும். புறம்போக்கில் இறால் பண்ணை அமைத்துள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் காப்பீடு செய்துள்ள அனை வருக்கும் இழப்பீட்டிற்கு ஏற்ப காப்பீட்டுத்தொகை வழங்க வேண்  டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி  வரத்து வாரிகளை தூர்வாரி நீர்  நிலைகளைப் பாதுகாக்க வேண்  டும் என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.