districts

img

ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் கட்டுமான தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி, மார்ச் 12 - இயற்கை மரண உதவித்தொகை ரூ. 2 லட்சம் வழங்க வேண்டும் கட்டுமான தொழி லாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு வலி யுறுத்தியுள்ளது. கட்டுமான தொழிலாளர் சங்கம் கள்ளக்குறிச்சி மாவட்ட மாநாடு  செவ்வாயன்று (மார்ச் 12) மந்தை வெளியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.சேகர் தலைமை தாங்கி னார். மாநில கவுரவத் தலைவர் ஆர்.சிங்காரவேலு துவக்கி வைத்து பேசி னார், மாநில பொதுச் செயலாளர் டி. குமார் நிறைவுரையாற்றினார். மாவட்ட பொருளாளர் வி.ராஜி, தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு மாவட்ட கௌரவ தலைவர் ஐ. ஷேக் சலாவுதீன், சிஐடியு  மாவட்ட பொருளாளர் எ.வீராசாமி, எஸ். செல்வரங்கன்,பூமாலை, முனுசாமி, மணிகண்டன், வீரபாண்டியன், கொளஞ்சி, ஆகியோர் பேசினர். தீர்மானங்கள்  கம்பி சிமெண்ட் எம் சாண்ட் மணல் போன்ற கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், ஓய்வூ தியம் ரூ. 3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், பெண்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும், திருமண உதவித்தொகை ரூ. 50 ஆயிரம் வழங்க வேண்டும். வீடில்லாத கட்டுமான தொழிலாளர்கள் அனைவருக்கும் வீடு கட்டுவதற்கு ரூ. 4 லட்சம்  வழங்க வேண்டும், எங்கு விபத்து நடந்து தொழிலாளி இறந்தாலும் ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாவட்டத் தலைவராக ஆர்.பச்சையப்பன், செயலாளர் எஸ்.சேகர், பொருளாளர் கே.ராமச்சந்திரன் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.