districts

img

ஓசூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி மோசடி

கிருஷ்ணகிரி, செப்.8 -  ஓசூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி மோசடி செய்த குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, மூக்கண்ட ப்பள்ளி எம்ஜிஆர் நகர் பகுதியில் கிருஷ்ணன், அவரது மனைவி குமாரி, மகள் உஷா, மகன் விக்னேஷ் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். ஒரு லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை சீட்டு  பிடித்து, மாதத்திற்கு 5 முறை சீட்டு ஏலம் நடத்தி வந்துள் ளனர். 200க்கும் மேற்பட்டவர்கள் ஏலச்சீட்டு களில் பணம் கட்டி வந்துள்ளனர். சீட்டுகள் முடிந்த நிலையில், சிலருக்கு பணம் தர வில்லை. பணம் கேட்டவர்களிடம் அடுத்த சில நாட்களில் பணம் தருவதாக கூறியுள்ளனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சீட்டு நடத்தி வந்த குடும்பத்தினர் தலை மறைவாகி விட்டனர்.  ஏலச்சீட்டில் ஏமாற்றப்பட்ட எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த மணிவண்ணன், முருகன், தங்கமணி, சுதாகர், மணி,  பாண்டி உட்பட 60 பேர் மாவட்ட ஆட்சியரிடம், ஏலச்சீட்டு பணத்தை மீட்டு தர கோரி மனு அளித்தனர்.