சென்னை, டிச.30- டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் ரோட்டரி திறன் மேம்பாட்டு மையத்தை மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்ட ஆளுநர் என்.எஸ். சரவணன் ஆகியோர் திறந்து வைத்தனர். சர்வதேச ரோட்டரி சங்க 3234 மாவட்ட அமைப்பானது, சென்னை ரோட்டரி கிளப்), மகளிர் அதிகாரமளிப்பு, பொரு ளாதார மேம்பாடு மற்றும் தொழில்வாய்ப்பு சேவைகள் குழு ஆக்சஸ் ஹெல்த்கேர் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து, தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுத் துறை உதவியுடன் பெண்க ளுக்கு தையல் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு பெறவும், சொந்தமாகத் தையல் தொழிலைத் தொடங்கவும் இந்த மையத்தை அமைத்து ள்ளன. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சேலையூர், செம்பாக்கம் மற்றும் மயி லாப்பூர் ஆகிய இடங்களில் ஏற்கெனவே இயங்கி வரும் ரோட்டரி திறன் மேம்பாட்டு மையங்களில் பயிற்சி பெற்ற பெண்களுக்கு ரூ. 20 லட்சம் மதிப்புள்ள 200 விலையில்லா மின் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் திறக்கப் பட்டுள்ள புதிய மைய மானது, தமிழ்நாடு அர சின் திறன் மேம்பாட்டுத் துறையுடன் இணைந்து, அனைத்துப் பின்னணி களில் இருந்து வரும் பெண்களுக்கும் 3 மாதங்க ளுக்கு, 120 மணிநேர தையல் பயிற்சிகளை இலவசமாக வழங்கவுள்ளது. பயிற்சி முடித்த பெண்கள் தொழில் தொடங்க விரும்பினால், ரோட்டரி அமைப்பானது விலையில்லா மின் தையல் இயந்திரங்களை வழங்கும் என்று அந்த அமைப்பின் செய்திகுறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.