districts

img

ஓசூர் புத்தகத் திருவிழாவில் ரோகிணி, அறிவுமதி பங்கேற்பு

கிருஷ்ணகிரி,ஜூலை 21-    

     கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பிஎம்சி கல்விக் குழுமம் இணைந்து ஓசூரில் நடத்தும் 12 வது புத்தகத் திருவிழாவில் திரைக்கலைஞர் ரோகினி கலந்து கொண்டார்.  

   தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பால சுந்தரம் தலைமை தாங்கினார். புத்தக திருவிழா துணைத் தலைவர் மணிமேகலை வரவேற்றார்.

   தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா,கர்நாடகா அரசின் ஐஏஎஸ் அதிகாரி ராம் பிரசாத், முன்னாள் நக ராட்சி தலைவரும் 22 வது வார்டு மாமன்ற உறுப்பினருமான மாதேஸ்வரன், தாமஸ் ஜான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    “ஏன் தமிழ்”எனும் கேள்விக்கு திரைப் பட பாடலாசிரியர் அறிவுமதி கருத்துரை ஆற்றினார். தமுஎகச மாநிலத் துணைத் தலைவரும் கலைமாணியுமான ரோகிணி “ரவுத்திரம் பழகு” என்ற தலைப்பில் உரை யாற்றினார்.

   கடந்த ஆண்டு புத்தகத் திருவிழாவுக்கு குழந்தைகள் எழுதிய சிறுகதைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அவர்களின் சிறுகதை நூல்களும் வெளியிடப்பட்டன. தமிழ்நாடு அறிவியல் இயக்க பொருளாளர் சூர்யா நன்றி கூறினார்.