districts

img

பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த கோரி சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, ஆக. 29-  திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் நகராட்சியில் சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்திற்கு விரோதமாக சாலையோர வியாபாரிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதை கைவிட வேண்டும். கிராம ஊராட்சிகளுக்கு பாதுகாப்பு சட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திரு வண்ணாமலை மாவட்ட சாலையோர வியா பாரிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பொருளாளர் ஆர்.அம்பிகா தலைமை தாங்கினார்.  சிஐடியு நிர்வாகி வே. சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.