districts

img

விம்கோ ரயில் நிலையம் செல்லும் சாலை பணி துவக்கம்

சென்னை, பிப்.6- விம்கோ ரயில் நிலையத்திலிருந்து நகர்க ளுக்கு செல்லும் சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியது. திருவொற்றியூர் 4ஆவது வட்டத்திற் குட்பட்ட விம்கோ ரயில் நிலையத்திலிருந்து  சண்முகபுரம், பூம்புகார் நகர், அம்பேத்கர் நகர், சரஸ்வதி நகர், டி.எஸ்.கோபால் நகர் போன்ற பல நகரங்களுக்கு செல்லும் சாலை நீண்ட காலமாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருந்தன. இதனால் அந்த சாலையில் செல்லும் மக்கள், வாகன  ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். இந்நிலையில் 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் தொடர் முயற்சியால் 37 லட்ச   ரூபாய் மதிப்பீட்டில் 320 மீட்டர் நீளத்திற்கு தார் சாலை அமைக்க ஒப்புதல் வழங்கப் பட்டது. இதையடுத்து சாலை அமைக்கும் பணியை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் செவ்வாயன்று (பிப். 6) துவக்கி வைத்தார். இதில் உதவி பொறியாளர் அன்னலஷ்மி, பொதுநலச் சங்க நிர்வாகி கள் சரவணன், மோகனசுந்தரம், செல்ல துரை, முன்னாள் தலைவர் அர்ஜுனன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.