திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் செல்லும் சாலையில் நடைபாதைகளிலும், சாலைகளிலும் இரண்டு சக்கர வாகனங்களையும், விளம்பர போர்டுகளையும் வணிகர்கள் வைப்பதால் பொதுமக்கள் சாலையில் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே போக்குவரத்து காவல்துறையினர் இதை முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.