districts

img

திருவொற்றியூர் 4ஆவது வார்டில் சாலை அமைக்கும் பணி துவக்கம்

சென்னை, ஜன. 24- திருவீதியம்மன் 6ஆவது தெருவில் சாலை அமைக்கும் பணியை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் துவக்கி வைத்தார். திருவொற்றியூரில் திருவீதியம்மன் கோயில் 6வது தெரு மிகவும் பள்ளமான பகுதியாகும். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதோடு, அவ்வப்போது பாதாள சாக்கடை மேன்ஹோல் கசிவினால் தெரு முழுவதும் கழிவுநீர் தேங்கி நிற்கும். இதனால் மோட்டார் மூலம் கழிவுநீரை அகற்ற  வேண்டியிருந்தது. இந்நிலையில் மேன்ஹோல் உயர்த்திக் கட்டி, தரமான சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மேன்ஹோல் உயர்த்திக் கட்டப்பட்டது. மேலும் சாலை அமைக்க மாமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 8.2 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை யடுத்து சாலை அமைக்கும் பணியை மாமன்ற உறுப்பி னர் ஆர்.ஜெயராமன் வியாழனன்று (ஜன. 23) தொடங்கி வைத்தார். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கி யம், வடக்குப் பகுதி செயலாளர் எஸ்.கதிர்வேல், நிர்வாகி கள் வெங்கடையா, தனலட்சுமி, கிரிஜா நகர் தலைவர் சுப்பி ரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.