கள்ளக்குறிச்சி, பிப்.28 - கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கெடிலத்திலிருந்து கடலூர் செல்லும் சாலையில் உள்ளது தேவியானந்தல் கிராமம். இங்குள்ள மதுக்கடையை மூடக்கோரி 200க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலின்போது மதுக்கடை இரும்பு கதவுகளை அடித்து நொறுக்கினர். பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருநாவலூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கிராமத்திற்குள் மதுக் கடை திறந்து உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. தொடர்ந்து பெண்கள் கேலி, கிண்டலுக்கு உள்ளாகின்றனர். இதனால், தொழிலாளி வேலை செய்து வரும் பெண்கள் பாதிக்கின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே, மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என்றனர்.