சென்னை, செப். 15- ஆர்.கே. நகர் 41ஆவது வட்டத்தில் எழில் நகர் பகுதியில் புதிய மேம்பால கட்டுமானப் பணிகள் நடை பெற்று வருகின்றன. இத னால் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து 40 ஆண்டு களுக்கு முன்பு பயன்படுத் தப்பட்ட ரயில்வே சுரங்கப் பாதையை சீரமைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 25 லட்சம் ரூபாய் அண்மையில் ஒதுக் கீடு செய்யப்பட்டது. பணிகள் நிறைவடைந்த நிலையில் சீரமைக்கப்பட்ட சுரங்கப்பாதையை சட்ட மன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதனன்று (செப்.11) திறந்து வைத் தார். இதில் மண்டலக் குழு தலைவர் நேதாஜி யூ.கணே சன், மாமன்ற உறுப்பினர்கள் பா.விமலா, இ.மணி மேகலை, திமுக பகுதிச் செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன், லட்சுமணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.லோக நாதன், பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.