தொழிலாளர்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் தொழிற்சங்க உரிமையை பறிப்பதை கண்டித்தும், சாம்சங் தொழிலாளர்களின் சங்கத்தை உடனே பதிவு செய்த கோரியும், தொழிலாளர் சட்டத்திற்கும் தொழிற்சங்க சட்டத்திற்கும் எதிராக செயல்படும் சாம்சங் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் போராடிவரும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கடலூர் மாவட்டத்தில் திருப்பாதிரிப்புலியூர், வேலூரில் ஆட்சியர் அலுவலகம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக் குறிச்சியில் பேருந்து நிலையம் அருகிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத் தலைவர்கள் பி. கருப்பையன், டி.பழனிவேல், என்.ஆர். ஜீவானந்தம், டி.முரளி, எஸ்.பரசுராமன், எம்.கோவிந்தராஜ், எஸ்.தயாநிதி, வாசுதேவன், ஸ்ரீதர், ஸ்ரீதரன், கே.காங்கேயன், எம்.சிவக்குமார், இரா.பாரி, எஸ்.முரளி, கே.விஜயகுமார், எம்.செந்தில்,வீராசாமி உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.