பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து திங்களன்று (ஆக.5) ரிப்பன் மாளிகை அருகே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை ஆ.பிரியதர்ஷினி எம்.சி., தொடங்கி வைத்தார். சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் தா.சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில் மாவட்டச் செயலாளர் எஸ்.மனோன்மணி, பொருளாளர் மனோகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.