அண்மையில் அரசு உயர்த்தி அறிவித்திருந்த தொழில் உரிமக் கட்டணங்களை மறு ஆய்வு செய்து குறைத்திடக்கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரனை சந்தித்து மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா மனு அளித்தார். இதில் மாநில தலைமைச்செயலாளர் ஆர்.ராஜ்குமார், கூடுதல் செயலாளர் வி.பி.மணி, மாவட்டத் தலைவர்கள் எஸ்.சாமுவேல், ஒய்.எட்வர்ட், சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் இ.சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.