சென்னை,ஆக 2- பொதுமக்களுக்கு தேவையான பணி களை திறம்பட மேற்கொள்ள அடிப்படை கட்ட மைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநில மாநாட்டில் வலி யுறுத்தப்பட்டது. சங்கத்தின் 16வது மாநில மாநாடு சூளை யில் ச.முருகதாஸ் அரங்கில் வெள்ளியன்று துவங்கியது. மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் எம்.பி.முருகை யன் தலைமை தாங்கினார். மாநாட்டு வரவேற்புக்குழு தலைவரும் தமிழ்நாடு தலைமைச்செயலக சங்கத் தலைவருமான கு.வெங்க டேசன் வரவேற்பு ரையாற்றினார். அரசு ஊழியர் சங்கபொதுச் செயலாளர் ஆ.செல்வம் தொடக்கவு ரையாற்றினார். பொதுச்செயலாளர் சு.சங்கர லிங்கம் வேலை அறிக்கை யும் பொருளாளர் வெ. சோமசுந்தரம் நிதிநிலை அறிக்கையையும் சமர்பித்த னர். வாழ்த்து தலைமைச்செயலக சங்கச்செயலாளர் சு.ஹரி சங்கர், கிராமநிருவாக அலுவலர் சங்க மாநிலத்தலைவர் தி.ம. இராஜன்சேதுபதி, பொதுச்செயலாளர் ந.சுரேஷ், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கப்பொதுச்செயலாளர் ச.பாரி, கிராமநிருவாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தலைவர் இரா.அழகிரிசாமி, வருவாய் கிராம ஊழியர் சங்க தலைவர் ஆர்.திருமலை வாசன், நிலஅளவை அலு வலர்கள் ஒன்றிப்பு பொதுச்செயலாளர் அண்ணா குபேரன், வரு வாய் நிருவாக ஆணை யரக அலுவலர் சங்கத் துணைத்தலைவர் பி.வி. ஆனந்த் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். இதில் ஓய்வு பெற்ற, பதவி உயர்வில் சென்ற முன்னாள் மாநில நிர்வாகி களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மாலை நடைபெற்ற கருத்தரங்கில் மாநில துணைத்தலைவர் கு.கும ரேசன் தலைமை தாங்கினார். மாநிலச்செயலாளர் சு.பார்த்திபன் வரவேற்புரை யாற்றினார். ‘ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு’ என்ற தலைப்பில் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் கருத்துரையாற்றினார். நிறைவாக துணைத்தலை வர் ஆர்.எஸ்,இராஜ கோபால் நன்றி கூறினார். தீர்மானங்கள் காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்யவேண்டும், ஈட்டிய விடுப்பு ஒப்படைஊதியம் வழங்கவேண்டும், அனைத்து நிலை அலு வலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதி யம் தனி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நடைபெறும் பொதுமாநாட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வரு வாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.