திருவள்ளூர், ஜூலை 15-
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மண்டல அளவிலான கருத்தரங்கம் சனிக்கிழமையன்று (ஜூலை 15), திருவள்ளூரில் நடைபெற்றது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலு வலர் சங்கத்தின் வைரவிழா மற்றும் கருத்தரங்கம் சனிக்கிழமையன்று (ஜூலை 15) திருவள்ளூரில் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் எம்.பி.முருகையன் தலைமை தாங்கினார்.
திருவள்ளூர் மாவட்ட தலைவர் க.வெண்ணிலா வரவேற்றார்.மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராம லிங்கம் துவங்கி வைத்து பேசினார்.
மாநில நிர்வாகிகள் ஏ.மணிகண்டன், ஆர். எஸ்.ராஜகோபால், டீ.டி.ஜோஷி, கே.ஜெ.ஜெய்கர்பிரபு ஆகியோர் வாழ்த்தி பேசினர். "வருவாய்த்துறை கடந்து வந்த பாதை" என்ற தலைப்பில் கூட்டுறவு சங்கம் மாநில நிர்வாகி பி.கிருஷ்ணமூர்த்தி கருத்துரை வழங்கினார்.
"ஸ்தாபனமும் தலைமை பண்பும் என்ற தலைப்பில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில முன்னாள் துணைத் தலைவர் பி.ரவி பேசினார். "அரசு ஊழியர் கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் வருவாய்த்துறை அலு வலர் சங்கத்தின் மாநில முன்னாள் பொரு ளாளர் கோ.இளங்கோவன் கருத்துரை வழங்கினார்.மாநில பொருளாளர் வெ.சோமசுந்தரம் நன்றி கூறினார்.