நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி. கபீர்தாஸ் தலைமையில் ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் ஆர். ராஜசேகரன், மாவட்டச் செயலாளர் பி. லோகநாதன், பொருளாளர் என். ஞான உதயம், மாநில பிரச்சார செயலாளர் வி. மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.