வேலூர், அக்.8- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடியாத்தம் தாலுகா மாநாடு பலமநேர் சாலை சித்தூர் கேட்டில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு எஸ்.சண்முகம், ஆர்.சரவணன், எஸ்.குமாரி ஆகியோர் தலைமை தாங்கினர். மூத்த உறுப்பினர் ப.சாமிநாதன் செங்கொடியை ஏற்றி வைத்தார். வேலூர் மாவட்ட செயலாளர் எஸ்.தயாநிதி மாநாட்டைதொடங்கி வைத்து பேசினார். தாலுகா செயலாளர் எஸ்.சிலம்பரசன் வேலை அறிக்கையையும், தாலுகா உறுப்பினர் கார்த்திகேயன், நிதி நிலை அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.காத்தவராயன் வாழ்த்திப்பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சாமிநாதன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். தீர்மானம் குடியாத்தம் தாலுகாவில் உள்ள அனைத்து ஏரி குளங்களையும் தூர்வார வேண்டும், 100 நாள் வேலை பதிவு செய்த அனைவருக்கும் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும், எர்த்தாங்கல் ஊராட்சியில் கால்நடைமருத்துவமனை அமைக்கவேண்டும், மீனூர்-அக்ரஹாரம் ஊராட்சிகளுக்கு இடையே கவுண்டன் ஆற்றில்மேம்பாலம் அமைத்துதர வேண்டும், வனவிலங்குகளிடமிருந்து விளைநிலங்களையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 11 பேர்கொண்ட குடியாத்தம் தாலுகா குழுவின் செயலாளராக எஸ்.சிலம்பரசன் தேர்வு செய்யப்பட்டார்.