districts

img

விழுப்புரத்தில் அரசு வேளாண் கல்லூரி அமைக்கவேண்டும் அரசு ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம்

விழுப்புரம்,நவ.20- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்  விழுப்புரம் மாவட்ட 15-ஆவது மாநாடு விழுப்புரத்தில் மாவட்ட தலைவர் கு.சரவணன் தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர்  உ.சுமதி மாவட்ட மாநாட்டினை துவக்கி வைத்து உரையாற்றி னார். மாவட்ட தணிக்கையாளர்  ஆர்.சுதாகர் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். முன்னதாக வட்ட தலைவர் செ. திரு மாவளவன் வரவேற்று பேசினார், மாவட்ட செயலாளர்  சு.சிவக்குமார் வேலை அறிக்கையையும், பொருளாளர்  க.அன்பழகன் நிதி அறிக்கையை சமர்ப்பித்த னர். மாநிலச் செயலாளர்  அண்ணா குபேரன் சிறப்புரையாற்றினார். மாவட்டக்குழுதேர்வு மாவட்ட தலைவராக கு.சரவணன்,  செயலாளராக இரா. சிவக்குமார், பொருளாளராக  எம். சாருமதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அரசு ஊழியர் ஓய்வூதியர் மற்றும் ஆசிரியர் தொடர்பான முதலமைச்சரின் தேர்தல் கால வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், காலை உணவு திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி சத்துணவு ஊழியர்களை கொண்டு நடத்திட வேண்டும், சத்துணவு திட்டத்தில் பணிக்காலத்தில் மரணமடைந்த ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வழங்க வேண்டும். சத்துணவு-அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், எம்ஆர்பி செவிலி யர்கள், கணினி உதவியாளர்கள், சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் மூலமாக பணிபுரிவருக்கு காலமுறை ஊதியமும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியமும் வழங்கப்பட வேண்டும். தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் திட்ட பராமரிப்பு தூய்மை பணியை தனி யார் வசம் ஒப்படைப்பு அரசாணை 139 ரத்து செய்ய வேண்டும்.  வணிக வரித்துறையில் குறைக்கப்பட்ட உதவி யாளர் பணியிடங்களை மீள வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மாவட்டத் துணைத் தலைவர் தி.ஜெயந்தி நன்றி கூறினார்.