districts

img

வேலூர் தாலுகாவில் வேளாண் கல்லூரி அமைத்திடுக!

வேலூர், அக்.8 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் தெற்குதாலுகா மாநாடு மேட்டு இடையம்பட்டி சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு சி.எஸ்.மகாலிங்கம், டி.முரளி, வி.ஷோபா ஆகியோர் தலைமை தாங்கினர். மூத்த உறுப்பினர் ஜி.நரசிம்மன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.  தாலுகா செயலாளர் எஸ்.செல்வி வேலை அறிக்கையையும், தாலுகா உறுப்பினர் கே.சார்லஸ் நிதிநிலை அறிக்கையையும் சமர்ப்பித்தனர். வேலூர் மாவட்ட செயலாளர் எஸ்.தயாநிதி வாழ்த்திப்பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் செ.ஏகலைவன் மாநாட்டை நிறைவு செய்துபேசினார். தீர்மானம் மூஞ்சூர்பட்டு ஊராட்சிக்குட்பட்ட நாயக்கனேரி மலையில் வசிக்கும் மக்களுக்கு போக்குவரத்திற்கு தரமான சாலை வசதி செய்து கொடுக்கவேண்டும், மேட்டு இடையம்பட்டி கணவாய்மேடு பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள மயானத்தை வேறுஇடத்திற்கு மாற்றித்தர வேண்டும், அரியூர் ஜீவரத்தினம்நகர், விஸ்வநாதன் நகர்மக்களுக்கு இலவச வீட்டுமனைபட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வட்டக்குழுதேர்வு 9 பேர் கொண்ட வேலூர் தெற்கு வட்டக் குழுவின் செயலாளராக எஸ்.செல்வி தேர்வு செய்யப்பட்டார்.